கொலை செய்யப்பட்ட கசோக்கியின் பிள்ளைகளுக்கு சொத்துகளை வழங்கியது சவுதி அரசு

Published By: R. Kalaichelvan

03 Apr, 2019 | 10:27 AM
image

துருக்கியில் கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் கசோக்கியின் பிள்ளைகளுக்கு கோடிக்கணக்கான சொத்தை சவுதி அரசு வழங்கியுள்ளது.

துருக்கியில் வைத்து கொல்லப்பட்ட வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கிக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு சவுதி அரசு, வீடு, இழப்பீடு என பணத்தை கொடுப்பதற்கு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவை சேர்ந்த 59 வயதுடைய பத்திரிகையாளர் ஜமால் கசோகி அமெரிக்காவின் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பணியாற்றி வந்தார்.

 இவர் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும், அந்நாட்டின்  மன்னராட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதி வந்தார். 

இதையடுத்த அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி துருக்கியின்  இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்ற அவர் மர்மமாக கொலை  செய்யப்பட்டார்.

இந்நிலையில், கசோகியின் வாரிசுகளுக்கு சவுதி அரேபிய அரசு சொத்துக்கள் மற்றும் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

இதேவேளை, கசோக்கியின் கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், கசோக்கி வாரிசுகளின் எதிர்ப்புக்கு முகங்கொடுக்கும் வகையில், ஒவ்வொருவருக்கும் 27 கோடி ரூபா மதிப்பிலான வீடுகள் மற்றும் ஒவ்வொரு மாதமும் தலா ஒருவருக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுப்பதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08