மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில் 79 பேர் நேர்முகத்தேர்வுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நேர்முகத்தேர்வுக்காக 20 வயது இளைஞன் ஒருவன் உட்பட 79 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்களுள் பட்டதாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் 12 மற்றும் 22 ஆம் திகதிகளில் இந்த நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவேளை, அலுகோசு பதவிக்காக அமெரிக்க பிரஜை ஒருவர் உட்பட 102 விண்ணப்பங்கள் கிடைத்திருந்த நிலையில், அதிலிருந்து 79 விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த நேர்முகப் பரீட்சையின் பின்னர் அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவுசெய்யப்படுவர்.
இந்தநிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர்ப் பட்டியல் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதியும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM