பாடசாலை சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

Published By: Digital Desk 4

02 Apr, 2019 | 07:48 PM
image

பாடசாலை சிறுவன் தமது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த  சம்பவம் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில்   இடம் பெற்றுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட குறித்த சிறுவன் நாலபிட்டி கல்லோயா பகுதியை சேர்ந்த 13 வயதான துமேஸ் மதுஷன் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் தாய் தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் சிறுவனுக்கு தந்தை இல்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த சிறுவன் தமது பாட்டியின் பாராமரிப்பில் வளர்ந்த வந்துள்ளார் இந்நிலையில் நேற்றுபாடசாலையின் ஊடாக சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்து இருந்தபோதும் அந்த சுற்றுலா பயணத்திற்கு குறித்த சிறுவன் செல்லவில்லை எனவும் குறித்த சிறுவனின் சகோதரன் பாடசாலை விட்டு வீடு வந்த போதே குறித்த சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் குறித்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரனம் இதுவரை கண்டரிய படவில்லை எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இந்த சிறுவன் இன்றய தினம் பாடசாலை செல்லாது தனது பாட்டியின் சேலையில்  வீட்டின் அறையில் தூக்கிட்டு கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது சம்பவம் தொடர்பில் மரண விசாரனைக்காக நாவலபிட்டி நீதிமன்ற நீதவான் தலைமையில் விசாரனைகள் இடம்பெற்று சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22