வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக முன்னெடுக்கப்படும் 65ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் காணப்படும் பாரதூரமான விடயங்களை கருத்திற்கொண்டு அத்திட்டத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவசரகடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவில் எடுக்கப்பட்ட ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைவாகவும், துறைசார் நிபுணர்களின் ஆய்வறிக்கையைக் கருத்திற்கொண்டும் குறித்த கடிதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வடக்கு கிழக்கில் வீட்டுத் திட்டத்திற்கான தேவையானது மிகவும் பாரதூரமானது. கணிப்பீடுகளின் பிரகாரம் யுத்த அழிவிற்கு பின்னர் வடக்கு கிழக்கில் வீடுகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கு 137ஆயிரம் வீடுகள் தேவையாக உள்ளன. இந்த பிரச்சினையானது நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பானது இத்தேவையை தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கும் திட்டத்தினை வரவேற்கிறது.
எனினும் இத்திட்டம் தொடர்பில் நிலவும் பாரதூரமான விடயங்கள் தொடர்பில் சிவில் சமூக ஆர்வலர்கள், தொழிற்துறை சார்ந்தோர், மற்றும் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக முன்வைக்கும் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட கூடியவை அல்ல. இவற்றுள், மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் மேற்குறிப்பிட்ட வீடுகளின் பொருத்தம் தொடர்பிலான நிபுணர்களின் அறிக்கையும் உள்ளடங்கும். பின்வருவன இத்திட்டம் தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள மிக பிரதானமான விடயங்களாக காணப்படுகின்றன.
கட்டுமான நிறுவனத்தை தெரிந்தெடுப்பதற்கான கேள்விமனு நடைமுறை தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகள் இங்கு முக்கியமானதாகும்.
குறித்த தனியார் நிறுவனத்திற்கான கேள்விமனு ஒப்பந்தம் தொடர்பில் காணப்பட்ட பல்வேறு ஒழுங்கற்ற நடைமுறைகள் தொடர்பில் ஏராளமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றுள் ஒன்றாக, இந்த ஒப்பந்தத்தை குறிப்பிட்ட நிறுவனத்திற்க்கு வழங்குவதற்கான தீர்மானமானது கேள்விமனு கோரல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அதாவது 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே தீர்மானிக்கப்பட்டு விட்டது.
வீடுகளின் ஆயுட்காலம் தொடர்பான கரிசனைகள்
இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கரிசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நிபுணர்களின் கருத்துப்படி முன்மொழியப்பட்டுள்ள இந்த பொருத்து வீடுகள் 10 வருடங்களுக்கு மேல் தாக்கு பிடிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி தற்போது அமைக்கப்பட்டுள்ள மாதிரி வீடுகள் ஏலவே அமைத்து ஒரு சில வாரங்களுக்குள்ளேயே பொருத்துக்கள் பிரிய ஆரம்பித்து விட்டன.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வீடு என்பது வெறுமனே ஒரு உறைவிடம் அல்ல, மாறாக அது அவர்களது கலாச்சாரத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாத ஒன்றாகும். வீடானது ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கைமாறுகின்ற ஒன்றாகும். என்றாவது ஒரு நாள் தமது பிள்ளைகளுக்கு கொடுப்பதற்கென்றே பெற்றோர்கள் வீடுகளை அமைக்கிறார்கள். எனவே தமிழ் மக்களை பொறுத்தவரை, வீடென்பது அவர்களது கலாச்சாரம் வரலாறு,மற்றும் பாரம்பரியத்தோடு பிணைந்தது, மாத்திரமன்றி பல தலைமுறை வரை நிலைத்துநிற்க வேண்டிய ஒன்றாகவே காணப்படுகின்றது. எனவே வீட்டின் ஆயுட்காலம் என்பது முக்கியமான கரிசனையாகும்
சுற்றுச் சுழலுக்கு ஒவ்வாத வீடுகள்
முன்மொழியப்பட்டுள்ள வீடுகள் கற்களினாலே கட்டப்படாமல் பொருத்துக்களினாலேயே கட்டப்படுகின்றன. அதிக உஷ்ணமான இலங்கை போன்ற நாட்டிற்கு பொருத்தமற்ற ஒன்றாகும். இது மேலும் உஷ்ணத்தன்மையை அதிகரிக்க செய்கின்றதாகவே அமையும்.
வீடொன்றின் செலவீனம்
தற்போது உள்ள திட்டத்தின் படி, ஒரு வீட்டிற்கான செலவாக 2.1 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகையானது, சூழலிற்கு ஏற்ற அதிக ஆயுளைக் கொண்ட கற்களினாலே அண்மையில் இந்திய அரசினால் வடக்கில் கட்டப்பட்ட 50,000 வீடுகளுக்கான செலவிலும் பார்க்க இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமானதாகும். இது மிக முக்கியமான ஒரு கரிசனையாகும், ஏனெனில் 130,000 வீடுகள் தேவைப்படுகின்ற சூழ் நிலையில் அரசாங்கமானது அதிக செலவில் அத்தேவையின் அரைவாசியையே பூர்த்தி செய்கிறது.
வீட்டுத்திட்டம்
செயற்படுத்தப்படும் முறை
வீட்டுத் தேவையை போலவே வடக்கில் உள்ள இன்னுமொரு பிரச்சினை வேலையில்லா பிரச்சினையாகும். இந்த நிலைமையில் உள்ளூரிலே காணப்படும் தொழிலாளிகளுக்கு இந்த திட்டத்தில் தொழ்ில் வழங்கப்படுவதனை உறுதி செய்ய வேண்டிய தேவைப்பாடும் உள்ளது.
எனவே அரசாங்கமானது இந்த திட்டம் தொடர்பில் கேள்வியுடன் கூடிய ஒரு மீளாய்வை செய்து இந்த திட்டமோ அல்லது வட கிழக்கில் காணப்படும் வீட்டு தேவைகளை நிவிர்த்தி செய்யும் வேறு எந்த திட்டத்தினையோ நடைமுறைபடுத்தும் போது, மேல் குறிப்பிடப்பட்டுள்ள கரிசனைகளை சரியான விதத்தில் கையாள வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஆணித்தரமாக பரிந்துரை செய்கின்றது.
வேண்டுகோள்
வடக்கு கிழக்கில் காணப்படும் வீட்டு தேவையை பூர்த்தி செய்ய அரசாங்கம் எடுத்துள்ள பிரயத்தனமானது வரவேற்க்கதக்கது. ஆயினும் அந்த முயற்சிகள் மக்களது தேவையையும் கலாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது மாத்திரமன்றி, செயற்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் நீண்ட காலத்திலே சமூகத்திலே ஏற்ப்படுத்தக்கூடிய கூடிய பின் விளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படியாக அமைகின்ற போது மாத்திரமே இப்படியான முயற்சிகள் நல்லிணக்கத்திற்கு பக்க பலமாக அமையும். மாறாக இப்படியான முயற் சிகள் ஊழலின் பக்கம் சாய்ந்து அதிகாரம் படைத்த ஒரு சிலருக்கு மாத்திரம் நன்மை பயக்கின்றதாக அமையக்கூடாது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தமக்குள்ள அர்ப்பணிப்பை பகிரங்கமாக இந்த அரசாங்கம் வெ ளிக்காட்டியுள்ளது. அந்த வகையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு உதவும் முகமான அவர்களது இல்லங்களை மீளக் கட்டியெழுப்பும் இப்படியான திட்டங்கள் மிக முக்கியமான நல்ல சந்தர்ப்பங்களாகும். எனினும் அரசியல் இலாபங்களுக்காக வடக்கு கிழக்கு மக்களின் உண்மையான தேவைகளை புறக்கணித்து இப்படியான திட்டங்களை முன்னெடுப்பதானது, அந்த அர்ப்பணிப்பை செயற் படுத்த முடியாத ஒரு நிலைமையையே எடுத்துக்காட்டும்.
தமிழ் மக்களின் சார்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலும் இந்த நல்ல வாய்ப்பை வீணடிக்க வேண்டாம் என நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். நல்லிணக்கத்திற்கு அரசாங்கம் அர்ப்பணித்துள்ளதாயின் அந்த அர்ப்பணிப்பு செயற்பாடுகளில் பிரதிபலிக்க வேண்டும். எமது பங்கிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பானது, உண்மையான நல்லிணக்கத்தை கொண்டுவரும் அரசாங்கத்தினது எந்தவொரு முயற்சிக்கும் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பை தொடர்ந்தும் வழங்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM