(இராஜதுரை ஹஷான்)
வரவு - செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு விரைவாக பொதுத்தேர்தலுக்கு செல்லவேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வஜிராஷ்ரம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கத்தின் பலவீனத்தை உறுதிப்படுத்துவதற்காகவேஇரண்டு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டது. இதுரைவரையில் வரவு- செலவு திட்டத்தை மூன்றில் ஒரு பெரும்பான்மையில் தோற்கடித்துள்ளோம். மக்களுக்கு பயன்தராத வரவு - செலவு திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து செயற்படுகின்றோம்.
பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி மன்றம், மாகாண சபை அமைச்சுக்கான நிதிஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்மையினால் புதுவருட பிறப்பிற்கு அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளையும், மேலதிக கொடுப்பனவுகளையும் வழங்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் வஜிர அபேவர்தனவும் குறிப்பிட்டுள்ளமை பொய்யான கருத்தாகும்.
அமைச்சர் வஜிர அபேவர்தனவின் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டமைக்கும் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாமைக்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது எனவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM