திருமணத்திற்கு வந்தோருக்கு விசித்திர பரிசளித்த தம்பதி

Published By: Daya

02 Apr, 2019 | 04:37 PM
image

திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மரக் கன்றுகளை வழங்கிய விசித்திரமான தம்பதியினர்.  

கடந்த வாரம் நடைபெற்ற திருமண விழாவின் போது கலந்துகொண்ட அனைவருக்கும் மரக் கன்றுகளை கொடுத்த தம்பதியினரின் விசித்திரமான செயல் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளன.

குறித்த திருமண பந்தத்தில் இணைந்த கசுன் தனுத்தர மற்றும் கொளசல்யா மதுவந்தி தம்பதிகளே இவ்வாறு மரக்கன்றுகளை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 

கோடிக்கணக்கில் செலவழித்து திருமண வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளை நடத்துவோர் மத்தியில் குறித்த தம்பதிகள் செயல் மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right