நண்பர்களுக்கிடையில் கைகலப்பு : கத்திக்குத்திற்கு இலக்கானவர் வைத்தியசாலையில்

Published By: Priyatharshan

18 Apr, 2016 | 04:08 PM
image

திருகோணமலை, கன்னியாப் பகுதியில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

கன்னியா, 06ஆம் கட்டையைச் சேர்ந்த பலனியாண்டி கோமலதாஸ் (33 வயது ) என்பவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் - சிங்கள புது வருடத்தை கொண்டாடுவதற்காக இருவரும் மது அருந்தியதாகவும் அவ்வேளையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினாலேயே இந்தக் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கத்தியால் குத்திய நபர், கன்னியாப் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் உப்புவெளி பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56