திருகோணமலை, கன்னியாப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னியா, 06ஆம் கட்டையைச் சேர்ந்த பலனியாண்டி கோமலதாஸ் (33 வயது ) என்பவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் - சிங்கள புது வருடத்தை கொண்டாடுவதற்காக இருவரும் மது அருந்தியதாகவும் அவ்வேளையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினாலேயே இந்தக் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
கத்தியால் குத்திய நபர், கன்னியாப் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM