தனது நண்பனின் கால்களைக் கட்டி பெற்றோல் ஊற்றி தீவைத்த சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் தனது நண்பரொருவர் மீது பெற்றோல் ஊற்றி தீயிட்டதில் குறித்த நபர் தீப்பற்றி எரிந்து கருகி உயிரிழந்துடன் தீயிட்டுக் கொளுத்திய நண்பரையும் கல்குடத பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கண்ணகிபுத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நாகன் சாமியன் என்பவரே இவ்வாறு எரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் .
விநாயகபுரம் 9 ஆம் குறுக்கு வீதியில் மதுபோதையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட கைகலப்பையடுத்து உயிரிழந்த நபர் வீதியில் கீழே வீழ்ந்ததையடுத்து அவர் மீது பெற்றோலை ஊற்றி தீவைத்துள்ளதாகவும் அவர் தீயில் எரிந்து கருகி உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தீயிட்டவர் தப்பியோட முயற்சித்தபோது பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்த நிலையில் அவரை பொலிஸார் பொதுமக்களிடம் இருந்து மீட்டெடுத்து கைதுசெய்தனர்.
கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பாலசுப்பிரமணியம் ரஞ்சன் என்பரே சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM