ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று இடம்பெறவிருந்தநிலையில் குறித்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சுகவீனமுற்றுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாணத்தில் நிலவு காணி பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கும் இடையில் நடைபெறவிருந்த முக்கிய சந்திப்பே பிற்போடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவிருந்த இந்த சந்திப்பில் வடக்கு மக்களின் காணிப் பிரச்சினை மற்றும் சிவில் நிர்வாகத்திற்கான தடைகள், வடக்கு மக்களின் விடுவிக்கப்படாத காணிகள், விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்களால் குடியேறமுடியாத நிலை உள்ளிட்ட சிவில் நிர்வாகத்திற்குள்ள தடைகள் போன்ற பிரச்சினைகளை மையப்படுத்தியே இன்று குறித்த சந்திப்பு இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM