சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கை பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகிறார்கள்.குறிப்பாக இந்த பேஸ்புக் தளத்தில் அதிகளவு வீடியோ நேரடி ஒளிபரப்பு கொடுக்கப்படுகிறது,
இந்நிலையில் சமீபத்தில் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சேர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தாக்குதில் ஈடுபட்டவர், தாக்குதல் சம்பவத்தை தனது பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தார். பள்ளிவாசல்களுக்கு காரில் வந்ததிலிருந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவது வரை நேரடி ஒளிபரப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் வெளியிட்ட பேஸ்புக் நேரடி ஒளிபரப்பை அந்த நேரத்தில் 200பேர் மட்மே பார்த்தனர், மேலும் வீடியோ பதிவேற்றப்பட்ட 29 நிமிடங்களில், 4ஆயிரத்திற்கு மேல் அதிக மக்கள் பார்த்தனர். உடனடியாக பேஸ்புக் பயனாளர் ஒருவர் அந்த வீடியோ குறித்து புகார் செய்தவுடன் வீடியோ உடனடியாக நீக்கப்பட்டது. புதிய கட்டுப்பாடு இருந்தபோதிலும் பல தளங்களில் அந்த வீடியோ பரவியதாகவும், அதனை தடுக்க பேஸ்புக் தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் பேஸ்புக் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொடூரமான படங்கள், வீடியோ பகிரப்படுவதை தடுக்கும் வகையில், பேஸ்புக் விதிகளை மீறியவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதியை தடுப்பது உள்ளிட்ட வகையிலும் பல கட்டுப்பாடுகளை கொண்டுவர பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM