ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஓட்டங்களை 175 குவித்ததுள்ளது.
12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 12 ஆவது லீக் ஆட்டம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.
இப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில், போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து ஓட்டங்களை 175 குவித்தது.
சென்னை அணி சார்பில் ராயுடு ஒரு ஓட்டத்துடனும், வட்சன் 13 ஓட்டத்துடனும், சுரேஷ் ரய்னா 36 ஓட்டத்துடனும், கேதர் யாதவ் 8 ஓட்டத்துடனும், பிராவோ 27 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், 46 பந்துகளில் 4 ஆறு ஓட்டம், 4 நான்கு ஓட்டம் அடங்களாக 75 ஓட்டத்துடனும், ஜடேஜா 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுக்களையும், குல்கரனி, பென்ஸ்டோக்ஸ் மற்றும் உனாட்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
நன்றி : ஐ.பி.எல். இணையளத்தளம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM