கடந்த வருடம் ஜெருசலேம் நகருக்கு, அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை இடம் மாற்றியது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக வாரந்தோறும் பாலஸ்தீனியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் கடந்த மே 14ஆம் திகதி 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதன்பின் எகிப்து தலைமையிலான பேச்சுவார்த்தையினை தொடர்ந்து பதற்றம் குறைக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் பலியாவது தடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் முதலாம் ஆண்டுதினத்தினை முன்னிட்டு பாலஸ்தீனியர்கள் ஆயிரக்கணக்கில் இன்று இஸ்ரேல் மற்றும் காசா எல்லை பகுதியில் ஒன்று திரண்டனர்.
இஸ்ரேலில் எதிர்வரும் ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது. பதற்றம் நிறைந்த இந்த சூழலில் எல்லை பகுதியில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய படைகள் குவிக்கப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிறு இளைஞர் குழுக்கள் காசா நகரின் கிழக்கே வேலியை அணுகி அதனை பலமுறை உடைக்க முற்பட்டனர். அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டும் பலனில்லாத போது, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கற்களை வீசி பாலஸ்தீனிய இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக அவர்கள் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். போராட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM