வவுனியா, மன்னார் வீதியில் குருமண்காடு சந்திக்கு அண்மித்ததாக இருந்த மரத்தளபாட விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல இலட்சம் ரூபா பெறுமதியான மரத்தளபாடங்கள் மற்றும் இயந்திர சாதனங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் ஏற்பட்ட குறித்த தீ விபத்து சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக நீடித்தது.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அதன் உரிமையாளர்கள் வவுனியா நகரசபை மற்றும் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த நகரசபையின் தீயணைப்பு வாகனம் மற்றும் பொலிசாரின் தண்ணீர் பவுசர் என்பனவும், அப் பகுதி பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை.
குறித்த மரத்தளபாட மற்றும் மர விற்பனை நிலையம் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த மரத்தளபாட விற்பனை நிலையத்தில் மரத்தளபாடங்கள், வெட்டுமரம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய இயந்திர சாதனங்கள் இருந்த நிலையிலேயே அவை எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கும் வியாபார நிலைய உரிமையாளர் அவற்றின் பெறுமதி 50 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என தெரிவித்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டமையினால் வவுனியா - மன்னார் வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. இருப்பினும் போக்குவரத்து பொலிசார் நிலமையை சீர் செய்தனர்.
குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் இது குறித்து வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM