சித்திரவதைத் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழு இலங்கைக்கான அதன் முதல் விஜயத்தை மேற்கொண்டு இவ்வாரம் கொழும்பு வருகின்றது.
ஏப்ரல் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவிருக்கும் நால்வர் கொண்ட அந்த உபகுழு அரசாங்க அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புக்களுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தும்.
கொழும்பில் அவர்கள் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகள், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா சாசனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் கடப்பாடுகளுக்கு இசைவாக இலங்கை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவுவதில் கவனம் செலுத்தும்.
மோல்டோவா குடியரசைச் சேர்ந்த விக்டர் சஹாரியா தலைமையிலான இந்த உபகுழுவில் மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த சத்யபூஷன் குப்த் டோமா, சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த பெட்ரோ மைக்கிலிடஸ் மற்றும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜுன் லோபேஸ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM