இலங்கை வருகிறது சித்திரவதைத் தடுப்பு தொடர்பான ஐ.நா. உபகுழு

Published By: Daya

30 Mar, 2019 | 03:41 PM
image

 சித்திரவதைத் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழு இலங்கைக்கான அதன் முதல் விஜயத்தை மேற்கொண்டு இவ்வாரம் கொழும்பு வருகின்றது.

ஏப்ரல் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவிருக்கும் நால்வர் கொண்ட அந்த உபகுழு அரசாங்க அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புக்களுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தும்.

கொழும்பில் அவர்கள் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகள், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா சாசனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் கடப்பாடுகளுக்கு இசைவாக இலங்கை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவுவதில் கவனம் செலுத்தும்.

மோல்டோவா குடியரசைச் சேர்ந்த விக்டர் சஹாரியா தலைமையிலான இந்த உபகுழுவில் மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த சத்யபூஷன் குப்த் டோமா, சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த பெட்ரோ மைக்கிலிடஸ் மற்றும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜுன் லோபேஸ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41