நீதித்துறையை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது - வாசுதேவ

Published By: Daya

30 Mar, 2019 | 03:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

   எமது நாட்டின் நீதித்துறையை பலவீனப்படுத்தும்  செயற்பாடுகளுக்கு  இடமளிக்க முடியாது அனைத்து பிரச்சினைகளுக்கும் உள்ளக விசாரணையின் ஊடாகவே தீர்வு காண முடியும்.   இவ்விடயத்தில்  அனைத்து தரப்பினரும்   நாட்டின் இறையாண்மையினை மதித்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

 இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வுக்காண சர்வதேச நீதிபொறிமுறையினையும், கலப்பு நீதிமன்ற உருவாக்கத்தினையும்  நாடமுயல்வது நாட்டின் நீதித்துறையினை பலவீனப்படுத்தும். இறுதிக்கட்ட யுத்தத்தில்  இராணுவத்தினர் சிவில் குற்றங்களை மேற்கொண்டிருந்தால்  நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்.  

இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சிவில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் பொதுச்சட்டத்திலும், இராணுவ சட்டத்திலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று இராணுவதளபதி குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

இந்நிலைப்பாட்டிலே  நாங்களும் இருக்கின்றோம். மேற்குலக நாடுகள் செயற்படும்  விடுதலை புலிகளின் ஆதரவான  அமைப்புகளின் விரும்பங்களை எமது நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக ஒருபோதும்  செயற்படுத்த இடளிக்க முடியாது.

 தற்போது   இலங்கையின் நீதித்துறையில் முறையான தீர்வை பெற்றுக் கொள்ள முடியாது என்று சர்வதேச நீதிபொறிமுறையினை நாடமுயற்சிப்பது எவ்வகையில்  சாத்தியமாகும் என மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01