உல்லாச பிரயாணியாக வந்திருந்த சீன யுவதியொருவரின் பெறுமதியான டிஜிட்டல் கெமராவைத் திருடிய உல்லாச பிரயாணியான இந்திய யுவதி எல்ல பொலிசாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த சீன யுவதி இந்தியாவின் பிரஜையான யுவதியொருவருடன் நட்புறவாகி இருவரும் இலங்கைக்கு உல்லாச பிரயாணிகளாக வந்து பதுளைப்பகுதியின் எல்ல பிரதேசத்திற்கு வந்து உல்லாச விடுதியொன்றில் தங்கியிருந்தனர்.
அவ்வேளையில் சீன யுவதியின் உடைப்பையிலிருந்த பெறுமதி மிக்க டிஜிட்டல் கெமரா காணாமல் போனது குறித்து அவ் யுவதிவ் எல்ல பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இப் புகாரையடுத்து விசாரணையை மேற்கொண்ட எல்ல பொலிசார் சீன யுவதியின் நண்பியான இந்திய யுவதியைக் கைது செய்து காணாமல் போனதாகக் கருதப்பட்ட டிஜிட்டல் கெமராவையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்திய யுவதியை பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.கே. அலகியவன்ன தெரிவித்தார்.
மீட்கப்பட்ட கெமரா தன்னுடையதென்று சீன யுவதி பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இக் கெமராவின் பெறுமதி 3 இலட்சம் ரூபாவென்று பொலிஸ் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM