(எம்.எப்.எம்.பஸீர்)
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட கொழும்பின் பிரபல பாதாள உலகத் தலைவனும் போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான கஞ்சிபானை இம்ரான் எனபப்டும் 34 வயதான மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரானை சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றது.
கஞ்சிபானை இம்ரான் தொடர்புப்பட்ட குற்றங்கள் தொடர்பில் இதன்போது ஆழமான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
அத்துடன் நேற்று முதல் சி.ஐ.டி.யால் விசாரிக்கப்பட்ட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த வாகன உதிரிப்பாக வர்த்தகரான அன்டர்ஷன் பேர்னன்டியஸ் இன்று விடுதலை செய்யப்பட்டள்ளார்.
அவரிடம் முன்னெடுக்கப்ப்ட்ட விசாரணைகளில் குற்றங்கள் எதுவும் வெளிப்படாத நிலையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எனினும் கஞ்சிபானை இம்ரானுடன் நாடுகடத்தப்பட்டவர்களில் அடங்கும் ஜங்கா மற்றும் ரொட்டும்ப அமில ஆகியோர் முறையே நீர்கொழும்பு மற்றும் மொறவக்க நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏபரல் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை சிறைச் சாலை அதிகாரி லலித் குமார கடந்த மாதம் 27 ஆம் திகதி களுத்துறை எத்தனமடல பகுதியில் இடம்பெற்ற சிறைச்சாலை பஸ் வண்டி மீதான தக்குதல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிப்வினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் விசாரணைகளுக்கு உட்பட்ட நிலையில் இன்று களுத்துறை நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க களுத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM