”மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட மறுகணமே மின்சார சபையின் தொலைபேசியும் துண்டிக்கப்படுகிறது”

Published By: Daya

29 Mar, 2019 | 04:14 PM
image

மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட மறுகணமே மின்சார சபையின் ஏறாவூர் அலுவலகத்தின் தொலைபேசி அழைப்பும் துண்டிக்கப்படுகிறது என ஏறாவூர் நகரசபையின் துணைமுதல்வர் எம்.எல். றெபுபாசம் சபையில் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். 

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் மின்விநியோகம் துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்களில் பாவனையாளர்களுக்கு அதன் காரணத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லையென தெரிவித்துள்ளனர். 

வியாழக்கிழமை ஏறாவூர் நகரசபையின் 12 ஆவது மாதாந்த அமர்வில் சபையின் துணைமுதல்வர் சபையில் இக்குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் அடிக்கடி மின்விநியோகம் துண்டிக்கப்படுவதுண்டு. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனினும் மின்துண்டிப்பிற்கான காரணத்தையும் மீள மின்விநியோகம் வழங்கப்படும் நேரத்தையும் அறிந்துகொள்ளும் உரிமை பாவனையாளருக்கு உண்டு. 

ஆனால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட மறுகணமே  மின்சார சபையின் ஏறாவூர் அலுவலகத்தின் தொலைபேசி அழைப்பும் துண்டிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இதுதொடர்பாக கேட்கும்போது குறித்த சந்தர்ப்பத்தில் அதிக அழைப்புக்கள் வருவதனால் நெருக்கடி நிலைகாணப்படுவதாக தெரிவித்துள்ளனர். 

எனினும் இதன் உண்மை நிலையினை அறிவதற்காக மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட ஓர் இரவு  அங்கு விரைந்தபோது அங்குள்ள அலுவலர்கள் தொலைபேசி அழைப்பை செயலிழக்கச் செய்துவிட்டு உறக்கத்தில் இருந்ததை அறிய முடிந்தது என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41