(இராஜதுரை ஹஷான்)
கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம் பெறவில்லை. ஒருவேளை இவர்தான் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என்றால் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தற்போது இரு தரப்பிலும் போட்டித்தன்மை காணப்படுகின்றது. ஒரு நபரை ஜனாதிபதி வேட்பாளர் என்று பெயர் குறிப்பிட்டு அவருக்கு ஆதரவு வழங்கும் தரப்பினர் தங்களின் அரசியல் இருப்பினை தக்க வைத்துக்கொள்வதற்காக முயற்சி செய்கின்றார்கள். நாட்டின் எதிர்காலத்தையும், ஜனநாயக கோட்பாடுகளையும், கடந்து வந்த சம்பவங்களையும் மறந்து விடுகின்றார்கள்.
கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம் பெறவில்லை. ஒருவேளை இவர்தான் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என்றால் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டேன். அந்நிலையில் முக்கிய அரசியல் தீர்வுகளை மேற்கொள்ள நேரிடும். இவ்வருடம் தேர்தல் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் தேர்தல் இடம்பெறுவதற்கான எவ்வித ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தலை எந்நேரத்தில் நடத்த வேண்டும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை எவராலும் மாற்றியமைக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலை பிற்போடவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. அவை சாத்தியமற்றதாகி விடும் நிச்சயம் ஜனாதிபதி தேர்தல் குறிப்பிட்ட திகதியில் இடம் பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM