பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்தப் போக்கால் சத்திர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளர்கள் விடுதிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
புதன்கிழமை காலை ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக 14 நோயாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஐவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இதேவேளை தன்னியக்கமாக இயங்கும் வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கியும் செயலிழந்து காணப்பட்டதால் ஏனைய நோயாளர்கள் சத்திரசிகிச்சை மேற்கொள்ளாது திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேபோன்று தகரத்துண்டு வெட்டிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்ட சிறுவன் ஒருவன் யாழ். போதனாவைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
வடமராட்சி , வடமராட்சி கிழக்கு, தென்மராட்சியின் ஒரு பகுதியினைச் சேர்ந்த மக்கள் இந்த வைத்தியசாலையை நம்பியே உள்ளனர்.
இருப்பினும் மின்சாரம் தொடர்ந்து துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தும் கூட பழுதடைந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யாதிருக்கின்றமை வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்தப் போக்கினைக் காண்பிப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM