அரவக்குறிச்சி, திருப்பறங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று சட்டபேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் திகதியன்று இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் திருப்பறங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளை தவிர்த்து, மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் திகதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அத்துடன் இந்த மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த இயலாது என்றும் விளக்கம் அளித்தது.
இந்நிலையில் இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் திகதியன்றே இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும் என்று தி.மு.கவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு குறித்த விசாரணை இன்று நடைபெற்றது. அதில் தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடிய சட்டத்தரணி, மூன்று தொகுதிகளுக்கும் இடைதேர்தலை அவசரகதியில் நடத்த முடியாது என்று தெரிவித்துவிட்டது.
இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஏப்ரல் 8 திகதியன்று தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.
இதனிடையே சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மறைவையடுத்து காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை நான்காக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM