கடலுக்கு அப்பாலும் வாழும் கன்னித் தமிழ் 

Published By: Digital Desk 3

28 Mar, 2019 | 11:50 AM
image

கடலுக்கு அப்பாலும் சிங்கப்பூரில் கன்னி தமிழை கரிசனத்துடன், அரசாங்க உதவியுடன் சிங்கப்பூர் தமிழர்கள் வளர்ப்பதால், ஏப்ரல் மாதம் முழுவதும், அவள் விழாக் கோலம் பூண்டு இருக்கிறாள்.

சிங்கப்பூர் தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு குட்டித்தீவு. பார்க்கும் இடமெல்லாம் பசுமையும், தூய்மையும் நிறைந்த சிங்கப்பூர் ஒரு நவநாகரீக நாடு. மூர்த்தி சிறிதானலும் கீர்த்தி பெரிது என்பர். அதற்கிணங்க  சிங்கப்பூர் நாடு சிறியது என்றாலும், சிறந்த திட்டங்களை வகுத்து, அதை செயல்படுத்தியும், உலக தரம் வாய்ந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியும், சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில், தமிழும் ஒன்று. தாய் நாடு, அண்டை நாடு என எந்த நாட்டிலும் இல்லாத அளவு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு சிங்கப்பூர் அரசாங்கம் உதவுகிறது.

சிங்கப்பூரில், விண்ணிலும் (விமானம்) மண்ணிலும் (நாடாளுமன்றம்) தமிழைக் கேட்கலாம்; பாலர் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் மொழியைக் கற்க வாய்ப்பு உண்டு; முதுகலைப் பட்டம் மட்டும் அல்ல, முனைவர் பட்டமும் பெற முடியும்; தீபாவளி பண்டிகைக்கு இங்கு அரசு விடுமுறை. தமிழ் கவிதை வாசிக்கலாம், தமிழ் கலையையும் கற்கலாம்; சிங்கப்பூர் நாணயம், அரசாங்க அறிவிப்பு, பொது இடங்களில் தமிழ் மொழியில் எழுதியிருப்பதைக் காணலாம்.

இதில் மேலும் ஒரு முயற்சியாக, மக்களிடம், குறிப்பாக, இளைஞர்களிடம் தமிழை வாழ்வியல் சார்ந்த மொழியாக கொண்டு சேர்க்கும் நோக்கத்தில், 2000ஆம் ஆண்டில், தகவல், தொடர்பு மற்றும் கலை அமைச்சின் கீழ், ‘வளர் தமிழ் இயக்கம்’ எனும் ஒர் அமைப்புத் தொடங்கப்பட்டது.

வளர் தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில், 2007ஆம் ஆண்டு முதல், 13வது ஆண்டாக, &#“தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்” என்ற கருப்பொருளோடு, ஏப்ரல் மாதம் முழுவதும், “தமிழ் மொழி விழா” சிங்கப்பூரில் நடைப்பெற்று வருகிறது. 

இந்த வருடம், மார்ச் 24 முதல் ஏப்ரல் 28 ஆம் திகதி வரை ‘தமிழ் மொழி விழா 2019’ நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.

மார்ச் மாதம் 24 ஆம் திகதி சிங்கப்பூரின் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன்  தமிழ் மொழி விழா 2019 யை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

ஆரம்ப விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

“தமிழ் சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்று என்பதில் அரசாங்கத்துக்கு எப்போதும் உறுதியான கடப்பாடு உண்டு. அதைக்கொண்டு தான் பல்வேறு வழிகளிலும், எல்லா இடங்களிலும் வசதிகளை உண்டாக்குகிறோம். தாய் மொழிகள் தொடர்ந்து சிறந்து விளங்கும். அதுவே நம் அடையாளத்துக்கு நல்ல அடித்தளம்” என தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரிலுள்ள 43 தமிழ் அமைப்புகள், வளர் தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இந்த வருடம் மொத்தம் 46 நிகழ்ச்சிகளைப் படைக்கின்றன. தமிழ் விழா நிகழ்ச்சிகள் அனைத்து வயதினரையும் ஈர்க்கும் வகையில், இக்காலத்திற்கு ஏற்புடையதாக திகழ்கிறது. இயல், இசை, நாடகம், கருத்தரங்கம், மற்றும் இவற்றோடு இந்திய உணவு பழக்கவழக்கங்கள், நிதி ஆலோசனை, தொழில்நுட்ப பயன்பாடு என அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவைப் போன்றவற்றை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

சென்ற ஆண்டுகளை நோக்கும் பொழுது, இந்த ஆண்டு இளைஞர்களின் பங்கு அதிகரித்திருக்கிறது. இது எதிர்காலத்தில் தமிழ் செழித்து வளரும் என்பதற்கான ஒரு நல்ல அறிகுறி. உள்ளுர் கலைஞர்களுடன், திரு: சுகிசிவம் போன்ற பிரபல பேச்சாளர்களும் இந்த ஆண்டு தமிழ் மொழி விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பிக்கின்றனர்.

திருவள்ளுவர், பாரதிதாசனர் மேலும் சிங்கப்பூரில் தமிழ் வளர்த்த திரு: கோ சாரங்கபானி ஆகியோருக்கு விழாக்களோடு, மாணவர்களின் வாதிடும் திறமையை வளர்க்கும் “சொற்போர்” முதன்முறையாக பொமமலாட்டம் என்று பல வகையான நிக்ழ்ச்சிகள் மக்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன.

வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் ஆர் ராஜாராம் கருத்து தெரிவிக்கையில், “இளைஞர்களுக்கு, தமிழ் மொழி மீது ஆர்வம் ஏற்பட, வளர்தமிழ் இயக்கம், அதிக கவனம் செலுத்துகிறது” என்று கூறினார். மேலும், வெளிநாட்டினர் பலரும் இச்சமயம், சிங்கப்பூருக்கு வந்து, இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

 - திருமதி: செளந்தர நாயகி வயிரவன், சிங்கப்பூர்

 - படங்கள் : வளர்தமிழ் இயக்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06