(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொடவிடம் நான்காவது தடவையாக அடுத்த வாரம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, நேற்று கோட்டை நீதிவானுக்கு அறிவித்தார்.
முன்னதாக சி.ஐ.டி. இறுதியாக கடந்த மார்ச் 19 ஆம் திகதி 3 ஆவது தடவையாக கரன்னாகொடவை விசாரித்திருந்தது. இதன்போது அவரிடம் 4 மணி நேரம் தீவிர விசாரணை இடம்பெற்றிருந்தது. அதற்கு முன்னர் கடந்த 11 ஆம் திகதி திங்களன்று 8 மணி நேரம் விசாரணை செய்த சி.ஐ.டி. கடந்த 13 ஆம் திகதி மீளவும் அவரை ஆறு மணி நேரம் விசாரித்து வாக்கு மூலம் பெற்றிருந்தது.
இந் நிலையிலேயே சி.ஐ.டி.யினர் மீண்டும் அவரிடம் அடுத்த மாதம் 4 ஆம் திகதி விசாரணை செய்யவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM