ஈக்குவடோரை கடந்த சனிக்கிழமை இரவு தாக்கிய 7.8 ரிச்டர் பூமியதிர்ச்சியில் சிக்கி குறைந்தது 77 பேர் பலியானதுடன் 588 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இது ஈக்குவடோரை 1979 ஆம் ஆண்டிற்கு பின்னர் தாக்கிய மிகப் பெரிய பூமியதிர்ச்சியாகவுள்ளது.
மேற்படி பூமியதிர்ச்சி வட நகரான டுயிஸ்னியிலிருந்து சுமார் 27 கிலோமீற்றர் தொலைவில் 19.2 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கியுள்ளது.
அந்தப் பூமியதிர்ச்சியால் அது மையங்கொண்டிருந்த பிராந்தியத்திலிருந்து சுமார் 300 கிலோமீற்றர் தொலைவிலுள்ள குவேகில் நகரிலுள்ள பாலம் அழிவடைந்துள்ளதுடன் பிராந்திய கட்டமைப்புகளுக்கும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தாலிக்கு பயணத்தை மேற்கொண்டிருந்த ஈக்குவடோர் ஜனாதிபதி ராபயல் கொர்ரியா, இந்த பூமியதிர்ச்சியையடுத்து தாய்நாடு திரும்பியுள்ளார். அவர் தனது நாட்டில் அவசரகால நிலைமையொன்றைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
"இது மிகவும் வேதனை மிக்க தருணமாகவுள்ளது. நாட்டு மக்களை அமைதியுடனும் ஐக்கியத்துடனும் இருக்க கோருகிறேன். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள நாம் பலமாக இருப்பது அவசியமாகவுள்ளது" என அவர் கூறினார்.
“வீதிகளையும் மருத்துவமனைகளையும் மீள நிர்மாணிக்க முடியும். ஆனால் இழந்த உயிர்களை நாம் மீளப்பெற முடியாது. அதுவே மிகவும் வேதனை தரும் இழப்பாகவுள்ளது" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேற்படி பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிராந்தியங்களைச் சென்றடைவது சிரமமாகவுள்ளதால் அங்கு ஏற்பட்ட பாதிப்புகளை அறிய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பூமியதிர்ச்சியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொர்தோவிஜோ பிராந்தியத்திலுள்ள பல கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளதாகவும் அங்குள்ள குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் நிலைமையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளையிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் பூமியதிர்ச்சி காரணமாக பிறிதொரு நகரான பெடர் னேல் முழுமையாக தரைமட்டமாகியுள்ளதாக அந்த நகரின் மேயர் கப்றியல் அல்சிவார் தெரிவித்தார்.
இந்தப் பூமியதிர்ச்சியையடுத்து பிறப்பிக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மேற்படி பூமியதிர்ச்சி தொடர்பில் அயல் நாடான பெருவின் வட கடற்கரைப் பிராந்தியங்களிலும் சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM