(எம்.எப்.எம்.பஸீர்)
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் 7 மணிநேர விசாரணைகளின் பின்னர் அமல் பெரேராவின் மகன் நதீமல் பெரேரா விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமீரகத்தில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா மற்றும் சிறைச்சாலை அதிகாரி லலித் குமார ஆகியோர் இன்று அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி இருவரையும் விமான நிலைய சுங்கப் பிரிவினர், தேசிய உளவுத் துறை மையம் ஊடாக விமான நிலைய குற்றப் புலனயவுப் பிரிவினரிடம் கையளித்துள்ளனர்.
இதனையடுத்து, நதீமால் பெரேரா மற்றும் லலித் குமார ஆகியோரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினரும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து விஷேட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அந்த விசாரணைகள் பிற்பகல் 3.00 மணிவரை தொடர்ந்ததாகவும், அதனையடுத்து சுமார் 7 மணி நேர விசாரணையின் பின்னர் நதீமால் பெரேரா விடுவிக்கப்பட்டதாகவும் எனினும் சிறைச்சாலை அதிகாரி லலித் குமார மேலதிக விசாரணைகளுக்காக சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM