(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
காணாமல்போனோரின் உறவுகளுக்கு அரசு வழங்குவதாக அறிவித்துள்ள 6000 ரூபா கொடுப்பனவை 10000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, இந்த 10000 ரூபா கொடுப்பனவை சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சுகாதாரம்,போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு,மகளிர்,சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு,கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த விதவைகளுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள்,கணவர்களைத் தொலைத்தவர்கள் என 50000 க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கின்றனர். இந்த இரு தரப்பினரையும் இணைத்து இவர்களுக்கு நிரந்தர வருமானம் கொடுக்கக்கூடிய தொழில் முயற்சிகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM