இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு கடலில் நீந்தி சாதனை படைப்பதற்காக, தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது மாணவர் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தன்து சாதனைப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அதிக நீரோட்டம் உள்ள பாக் ஜலசந்தி கடலில், மார்ச் முதல் மே மாதம் வரை நீரோட்டம் மற்றும் அலையின் வேகம் குறைவாக இருக்கும். இந்த மாதங்களில் நீச்சல் வீரர்கள், தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை (30 கி.மீ.) நீந்தி சாதனை படைப்பது வழக்கம்.
இந்நிலையில், தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் ஜெய்ஜஸ்வந்த் (10) என்பவர் குறித்த பகுதியில் நீந்தி சாதனையை படைக்க உள்ளார். இவர், தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார். சிறுவயது முதல் நீச்சல் பயின்ற இவருக்கு, நீச்சலில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
இதற்காக, பயிற்சியாளர் விஜயகுமார் ஆலோசனையில் பல நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். தற்போது, தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை பாக் ஜலசந்தி கடலில் நீந்த முடிவு செய்தார். இதற்காக இன்று (27 ஆம் திகதி), ராமேஸ்வரத்தில் இருந்து மாணவர் ஜெய்ஜஸ்வந்த், அவருடைய தந்தை மற்றும் பயிற்சியாளர், வழிகாட்டு குழுக்கள் 15 பேருடன் விசைப்படகில் தலைமன்னாருக்கு பயணிக்கின்றார்.
இந்நிலையில் நாளை (28 ஆம் திகதி) அதிகாலை 2 முதல் 3 மணிக்குள், மாணவர் ஜெய்ஜஸ்வந்த் கடலில் குதித்து நீந்தி, மாலை 4 மணிக்குள் தனுஷ்கோடி அரிச்சல்முனை சென்றடையவுள்ளார்.. 1994ம் ஆண்டு, குற்றாலீஸ்வரன் என்பவர் தனது 12வது வயதில் இக்கடல் பகுதியை 16 மணி நேரத்தில் நீந்தி கடந்தார். ஆனால் 10 வயது மாணவன் ஜெய்ஜஸ்வந்த், 15 மணி நேரத்திற்குள் நீந்திவந்து அந்த சாதனையை முறியடிக்க திட்டமிட்டுள்ளதாக பயிற்சியாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM