(ஆர்.விதுஷா)
குருவிட்ட இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருவிட்ட பொலிசாருக்கு நேற்று செவ்வாய்கிழமை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ முகாமின் தங்குமிடத்தின் கூரை பகுதியில், குறித்த உயிரிழந்த இராணுவவீரர் தூக்கிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 34 வயதுடைய கம்புருபிட்டிய பகுதியை சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் , சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM