கலப்பு நீதிமன்ற பொறிமுறையை தமிழ்தேசிய கூட்டமைப்பு கேட்டால் கறுப்பு யூலை உருவாகும். என டிலான் பெரேரா கூறும் கருத்து தெரு சண்டை காரனின் கருத்துக்கு ஒப்பானது. என ரெலோ அமைப்பின் செயலாளா் சட்டத்தரணி என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
கறுப்பு யூலை அல்ல அதனை விட மோசமான ஒரு நிலை வந்தாலும் தமிழ் மக்கள் அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனா். எனவும் அது முள்ளிவாய்க்காலில் முடியாது. மாறாக இலங்கை இரண்டாக உடைவதில் சென்று முடியும் எனவும் எச்சரித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடா்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே என்.சிறீகாந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவா் கூறுகையில்:-
கொழும்பில் ஊடகவியலாளா்களை சந்தித்த டிலான் பெரேரா தமிழ்தேசிய கூட்டமைப்பு கலப்பு நீதிமன்ற பொறிமுறையை கேட்கின்றது. தமிழ்தேசிய கூட்டமைப்பு கலப்பு நீதிமன்ற பொறிமுறையை கேட்டால் மீண்டும் கறுப்பு யூலை ஒன்று உருவாகும் என கூறுகிறார்.
அதன் அா்த்தம் ஐ.நாவில் நாங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வோம் இலங்கையில் என்ன வேண்டுமானாலும் செய்வோம் நீங்கள் கவனிக்காது கொண்டு இருக்கவேண்டும். என்பதுதான். கறுப்பு யூலை என்பது 1983 ஆம் ஆண்டு தமிழா்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறி அதுவே இந்த நாட்டில் 26 வருடங்கள் நீடித்த மிக மோசமான யுத்தத்திற்கு வழிகோலியது. அந்த யுத்தத்தில் 2 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ் சிங்கள தரப்பில் பல ஆயிரக்கணக்கான இளைஞா்கள் உயிரிழந்தார்கள், பலா் அங்கவீனமாக்கப்பட்டார்கள்.
பலா் காணாமல்போனார்கள். இவற்றுக்கெல்லாம் மூல காரணம் கறுப்பு யூலை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் டிலான் பெரேராவின் கருத்து சந்தி சண்டியன்களின் கருத்துப்போல் இருக்கின்றது. உண்மையில் டிலான் பெரேரா இலங்கையில் உள்ள மக்களை நேசித்திருந்தால் கறுப்பு யூலை என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கே அவருக்கு வாய் கூசியிருக்கவேண்டும். ஆனாலும் கூச்ச நாச்சம் இல்லாமல் அவா் அந்த கருத்தை கூறியுள்ளார்.அவருக்கு நாங்கள் கூறவிரும்புவது கறுப்பு யூலை அல்ல அதனைவிட மோசமான சம்பவங்களையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ள தயார்.
தமிழ் மக்களின் நீதிக்கான எதிர்பார்ப்பின் முன்னால் கறுப்பு யூலை என்பது ஒன்றுமே இல்லை. கறுப்பு யூலையை காட்டி தமிழா்களை அச்சுறுத்தும் எண்ணம் இருந்தால் அது வெறும் கனவு மட்டுமே என்பதை டிலான் பெரேரா நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
மேலும் மீண்டும் ஒரு கறுப்பு யூலை வந்தால் அது முள்ளிவாய்க்காலில் முடியாது. அது இலங்கை இரண்டாக உடைவதில் முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM