வவுனியா நகரப்பகுதியில் விமானப்படையினரின் சீருடையுடன் சென்ற சிறுவனினால் ஆடை தொழிற்சாலையின் உரிமையாளருக்கு வவுனியா பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா நகரப்பகுதியில் நேற்றைய தினம் சிறுவனொருவன் விமானப்படையினரின் சீருடையுடன் நின்றுள்ளான். இதனை அவதானித்த பொலிஸார் குறித்த சிறுவனை அழைத்து விமானப்படையினரின் சீருடை எவ்வாறு வந்ததென விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது நெளுக்குளத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் இதனை கொள்வனவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
குறித்த ஆடை தொழிற்சாலைக்கு நேற்று மதியம் 3.00 மணியளவில் சென்ற வவுனியா பொலிஸார் ஆடை தொழிற்சாலையின் உரிமையாளரை விசாரணைக்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
அதன் பின்னர் இவ்வாறான உடைகளை விற்பனை செய்ய வேண்டாமென எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM