டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பாடகர் அமல் பெரேரா, அவரது மகன் நதீமால் பெரேரா மற்றும் லலித் குமார ஆகியோரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இவ்வாறு பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்ட மூவரிடமும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
டுபாயில் பாதாள உலகக் குழு தலைவர் மாக்கந்துரே மதூஸுடன் கைதுசெய்யப்பட்ட சிங்கள மொழி பாடகரான அமல் பெரேரா, அவரது மகன் நதீமால் பெரேரா மற்றும் லலித் குமார ஆகியோர் டுபாயில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி டுபாயில் வைத்து மாகந்துரே மதூஷினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்ததின வைபவமொன்றின் போது மாகந்துரே மதூஷுடன் சிங்களப் பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது மகனான நதீமல் பெரேரா உட்பட 31 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM