வவுனியாவில் நேற்று இரவு வாகல்கட, ஹெப்பற்றிகொலாவ பகுதிக்குள் நுழைந்த யானை துவிச்சக்கர வண்டியில் தனது வீடு நோக்கி சென்ற சிறுவனை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமானது கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது.
இச்சம்பவமானது நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 15 வயதுடைய சிறுவன் தன்னுடைய நண்பனின் வீட்டுக்கு சென்று விட்டு தனது வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை யானை தாக்கியதில் படுகாயமடைந்திருந்தார்.
கூக்குரல் சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்கள் உடனடியாக ஹெப்பற்றிகொலாவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்திருந்தார்கள்.
மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இன்று காலை சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM