இலங்கை நல்லூரில், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கத்தின் நினைவேந்தல் மற்றும் அறக்கட்டளை தொடக்கவிழா நடைபெற்றது.
இலங்கையில் தலைசிறந்த கல்விமான்களில் ஒருவரும், சமய சொற்பொழிவாளரும், குப்பிளான் கிராமத்தின் அடையாளமுமாக திகழ்ந்தவர் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம். இவர், கடந்த பிப்ரவரி மாதம் 13ம் திகதி காலமானார். இவருடைய நினைவேந்தல் நிகழ்வு, இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ துர்க்கா தேவி மணிமண்டபத்தில் நேற்று (24ம் திகதி) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை, அமரரின் மனைவி சாந்தா சிவ.மகாலிங்கம் நினைவுச் சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார். கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வரும், சிவ.மகாலிங்கத்தின் மாணவருமான ச.லலீசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், சிவத்தமிழ் வித்தகர் அறக்கட்டளையைத் தொடங்கி வைத்தார்.
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ‘சிவத்தமிழ் வித்தகம்’ என்ற நினைவு நூலை வெளியிட்டதுடன், ஆதீனம் சார்பாக அமரர் சிவ.மகாலிங்கத்திற்கு, தேகாந்த நிலையில் திருமந்திரக் கலாநிதி என்ற பட்டம் வழங்கி கவுரவித்தார். ஆதீன முதல்வருடன், வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியர் ம.வேதநாதன் ஆகியோர் இணைந்து விருது வழங்கினர்.
தொடர்ந்து, நல்லை ஆதீன முதல்வர், சின்மயா மிஷன் சிதாகாசனந்த சுவாமிகள், செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், தமிழருவி த.சிவகுமாரன், அமரரின் சகோதரர் சிவ.பஞ்சலிங்கம், தமிழக எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி ஆகியோர் பிரார்த்தனை உரையாற்றினர்.
நிகழ்வில், யாழ். இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் தாட்சாயணி கணேசநாதனின் தமிழிசைக் கச்சேரியும், ஆசிரியர் விதுஷா கோபிகிருஷ்ணாவின் வீணைக் கச்சேரியும் இடம்பெற்றன. கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கு.பாலசண்முகன் நூலின் வெளியீட்டு உரையையும், அமரரின் புதல்வர்களான ம.அருளினியன் நிறைவுரையும், ம.அரவிந்தன் நன்றியுரையும் ஆற்றினர்.
அமரரின் புதல்வர் ம.அரவிந்தன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிவத்தமிழ் வித்தகர் அறக்கட்டளையானது, திருமந்திர கற்கை ஊக்குவிப்பு, ஆன்மீக இளம் சொற்பொழிவாளர் ஊக்குவிப்பு, பின்தங்கிய பிரதேசங்களுக்கான மருத்துவ முகாம் நடத்துதல், குப்பிளான் கிராம கல்வி வளர்ச்சிக்கு பங்களித்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM