வலுவான நிலையில் ராஜஸ்தான் அணி ஆரம்பித்தாலும் இறுதியில் அடுத்தடுத்த ஆட்டமிழப்பினால் பஞ்சாப் அணி 14 ஓட்டத்தினால் வெற்றி பெற்றது.
12 ஆவது ஐ.பி.எல். தொடரின் நான்காவது போட்டி ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு ஜெய்பூரில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் தலைவர் ரகானே முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பஞ்சாப் அணியை பணித்தார்.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாட பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை குவித்தது.
இதையடுத்து 185 ஓட்டம் என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ராஜஸ்தான் அணி சார்பில் பட்லர் மற்றும் ரகானே ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கி அணிக்கு நல்லதொரு இணைப்பாட்டத்தை அதிரடியாக பெற்றுக் கொடுத்தனர்.
அதனால் ராஜஸ்தான் அணி 5.2 ஓவரில் 50 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் பட்லர் 29 ஓட்டத்துடனும், ரகானே 21 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.
இதையடுத்து 6 ஆவது ஓவரை எதிர்கொண்ட பட்லர் அந்த ஓவரின் இரண்டாவது பந்துக்கு நான்கு ஓட்டங்களையும், மூன்றாவது பந்துக்கு ஆறு ஓட்டத்தையும், நான்காவது, ஐந்தாவது பந்துக்கு இரண்டு நான்கு ஓட்டங்களையும் விளாசித் தள்ளினார். மொத்தமாக அந்த ஓவரில் ராஜஸ்தான் அணி 19 ஓட்டங்களை பெற்றது.
அத்துடன் பட்லர் 7 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ளி மொத்தமாக 29 பந்துகளில் 7 நான்கு ஓட்டம், 3 ஆறு ஓட்டம் அடங்களாக அரைசதம் கடந்தார்.
8 ஆவது ஓவருக்காக அஷ்வின் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரகானே 27 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணியின் முதல் விக்கெட் 78 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது.
இதையடுத்து ஆடுளம் நுழைந்த சஞ்சு சாம்சன் களமிறங்கி பட்லருடன் கைகோர்த்தாட ராஜஸ்தான் அணி 10 ஓவர்களின் நிலையில் 96 ஓட்டத்தையும், 11.1 ஓவரில் 100 ஓட்டங்களையும் பெற்றது. ஆடுகளத்தில் பட்லர் 65 ஓட்டத்துடனும், சாம்சன் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தடி வந்தனர்.
எனினும் 12.5 ஆவது ஓவரில் அஷ்வினின் நுனுக்கமான செயற்பாடு காரணமாக பட்லர் 49 பந்துகளில் 10 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்களாக 69 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார்.
ஒரு கடத்தில் ராஜஸ்தான் அணி 15 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றிருந்தது.
ஆடுகளத்தில் சாம்சன் 19 ஓட்டத்துடனும் ஸ்டீவ் ஸ்மித் 16 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். இதனால் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 30 பந்துகளுக்கு 50 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இருந்தது.
இந் நிலையில் 16 ஆவது ஓவரில் சாம் கரனின் நான்காவது பந்து வீச்சில் ஸ்டீவ் ஸ்மித் 19 ஓட்டத்துடனும் அதே ஓவரின் இறுதிப் பந்து வீச்சில் சாம்சன் 30 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களமிறங்கிய பென்ஸ்டோக்ஸிம் 17 ஓவரின் மூன்றாவது பந்தில் 6 ஓட்டத்துடனும், திரிபாதி 17 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஒரு ஓட்டத்துடனும், 18.5 ஆவது ஓவரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ராஜஸ்தான் அணி 163 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.
இறுதியில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 14 ஓட்டத்தால் தோல்வியைத் தழுவியது.
இப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் 7 விக்கெட்டுக்கள் 15 பந்துகளுக்கு வீழ்த்தப்பட்டமை விசேட அம்சமாகும்.
பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் ரஹ்மான், அன்கிட் ராஜ்பூட் மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுக்களையும், அஷ்வின் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM