பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நிதி நிறுவன உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் 

Published By: Digital Desk 4

25 Mar, 2019 | 04:19 PM
image

நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சென்று அங்கு பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிக்கு ஆயிரம் ரூபா இலஞ்சம் வழங்க முற்பட்ட அவரை  எதிர்வரும் 5 ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று  உத்தரவிட்டார்.

குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிவநாதனிடம்  சம்பவதினமான சனிக்கிழமை (23)  நிதி நிறுவனம் ஒன்றின் மூலம் தவணையடிப்படையில் பணம் செலுத்தும் வகையில் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்த ஒருவர் பணம் செலுத்தாத நிலையில் அந்த வாகனத்தை பறிமுதல் செய்வதற்காக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு குறித்த உத்தியோகத்தர் சென்றுள்ளார் 

இந்த நிலையில்  குறித்த வாகனத்தின் ஆவணங்கள் அடங்கிய பை ஒன்றில் ஆயிரம் ரூபா பணத்தை வைத்து முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ்  குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரியிடம் அந்த ஆவண பையிலை வழங்கினார்

இதன் போது பைலை திறந்துபார்த்த பொலிஸ் அதிகாரி அதில் ஆயிரம் ரூபா பணம் வைக்கப்பட்டு பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டுள்ள நிலையில் அவரை பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்தனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 72 வயதுடையவர் எனவும் இவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24); மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை  எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43