முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 15 மாதங்களில் 54 கிராமங்களில் ஆயிரத்து 350 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் விஜித கே.கமகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தால் பாதிப்படைந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு கட்டமாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவின் செயற்திட்டத்தின் கீழ் செமட்ட செவன வீட்டுத் திட்டத்தின் ஊடாக 2018 ஆம் ஆண்டு 42 கிராமங்களில் ஆயிரத்து 50 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டின் இது வரையான 3 மாதங்களில் 12 கிராமங்களில் 300 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடுகளும் ஏழு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியில் வழங்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வீட்டுத்திட்ட பிரச்சனைகள் கணிசமாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM