(எம்.எப்.எம்.பஸீர்)
புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றை தெற்கின் பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலை புலிகள் இறுதி யுத்தத்தின் போது புதைத்த ஆயுதங்களை மீள தோண்டி எடுத்து தெற்கின் பாதாள உலக குழுவினருக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத நடவடிக்கை குறித்து விசாரணகளில் தமிழ் அரசியல் தலைவர் ஒருவரை கொலை செய்ய தீட்டப்பட்ட சதி தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சி.சி.டி எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் கீழ் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த கொலை சதி குறித்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடி கண்டுப்பிடித்து அவற்றை தெற்கின் பாதாள உலக குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் இடம்பெறும் விசேட விசாரணைகளில் இதுவரை 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 90 நாட்கள் தடுப்பு காவலின் கீழ் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM