"வடக்கு தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் பொருளாதார மத்திய நிலையம் இடம் மாறியது"

Published By: Vishnu

22 Mar, 2019 | 07:29 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பில் விடப்படுகின்ற வவுனியா பொருளதார மத்திய நிலையத்தின் கேள்விக் கோரல்களை வவுனியாவுக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், 

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் வடக்கு தமிழ் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மை காரணமாக தாண்டிக்குளத்தில் இருந்து இரட்டை பெரியகுளம் பகுதிக்கு இடம்மாறியது. 

இந் நிலையில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சி எம்.பிக்களும் இணைந்து பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள கடைத்தொகுதிகளை வவுனியா மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு 12 ஆயிரம் ரூபா மாத வாடகைக்கு வழங்குவதெனவும் மிகுதிக்கடைகளை கேள்விக்கோரலுக்கு விடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

என்றாலும் தற்போது இதற்கான கேள்விக்கோரல் கொழும்பில் விடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தைப்பெற , நேர்முகத்தேர்வுக்கு தோற்ற கொழும்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வை ஏன் வவுனியாவில் செய்ய முடியாது? அதனால் இந்நடவடிக்கைகளை  வவுனியா மாவட்ட செயலகத்துக்குக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08