பொது மக்களின் காணிகளை அபகரிக்கும் திட்டமானது மாவை.யின் தலையீட்டால் கைவிடப்பட்டது

Published By: Vishnu

22 Mar, 2019 | 05:19 PM
image

வலிவடக்கில் கடற்படையினருக்கும் சுற்றுலாத்துறை திணைக்களத்திற்கும் காணிகள் சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் இடம்பெறவுள்ளது என்ற தகவலை அறிந்த பிரதேச மக்கள் இன்று காலை கடற்படை முகாமிற்கு முன்பாக ஒன்றுகூடியுள்ளனர்.

வலி வடக்கு கீரிமலை மற்றும் தல்சேனா விருந்தினர் விடுதி ஆகிய பிரதேசங்களை அண்டிய பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகளை நில அளவவையல் திணைக்களம் மேற்கொள்ள இருப்பதாக கிடைக்கப் பெற்றதகவலையடுத்து பொது மக்கள் அங்கு கூடியிருந்தனர். இதனால் அப்பகுதில் பரபரப்பு நிலைமை ஏற்பட்டது.

இதன்போது அங்கு கூடியிருந்த மக்களை கடற்படயினரும் இராணுவத்தினரும் முழுமையான கண்காணிப்பில் வைத்திருந்தை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 

சம்பவ இடத்திற்கு வந்திருந்த தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு தாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோன் என்று பொது மக்களுக்கு உறுதியளித்தார். இதனையடுத்து அப்பகுதியில் கூடியிருந்த பொது மக்கள் அங்கிருந்து சென்றனர். 

இதேவேளை கடற்படையினருக்கும் சுற்றுலாத்துறைத் துறைத் திணைக்களத்திற்கும் காணிகள் சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் இடம்பெறவிருப்பதாக செய்திகள் பரவியிருந்த நிலையில் தமிழத்தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் ரணிலிடம் குறித்த விடையத்தை தெளிவுபடுத்தியிருந்தனர். 

அதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு அளவிடும் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டதாக பாராளுமன்ற உறுதிப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்திருந்ததமை குறிப்பிடத்தக்ககது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21