விஷமற்ற விவசாயக் கொள்கையுடைய ஜனாதிபதி வேட்பாளரே ஜனாதிபதியாவார் - அத்துரலியே ரத்ன தேரர்

Published By: Daya

22 Mar, 2019 | 04:35 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விஷமில்லாத விவசாயத்தை  உருவாக்கும் ஜனாதிபதி வேட்பாளரை  நிறுத்துவோம். அதுவே எமது இலக்காகும் என சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.  

இம்மாதம்  30 ஆம் திகதி விவசாய புரட்சிக்கான போராட்டத்தை நாம் செய்யவுள்ளோம். இந்த நிகழ்வுக்கு இலட்சக் கணக்கான பொதுமக்கள் இணையவுள்ளனர்.

எனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விஷமற்ற விவசாய கொள்கை கொண்ட ஜனாதிபதியே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார். அதற்கான புரட்சியை நாம் ஆரம்பிப்போம்.

இலங்கையில் விவசாய மாற்றத்தை செய்ய வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு உரங்களை கொடுக்காமல் அவர்களுக்கு பணத்தை கொடுங்கள். அவர்கள்  இயற்கை உரத்தை உருவாக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். அதை செய்ய முடியுமானால் இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் 50 பில்லியன் ரூபா பெறுமதியான உர செலவை குறைக்க  முடியும். 

இன்று இலங்கையில் பயன்படுத்தும் உரங்கள் மூலமாக 15 ஆயிரம் சிறுநீரக நோயாளர் உருவாகியுள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு அப்போது 5 ஆயிரம் சிறுநீரக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்த ஆண்டு 15 ஆயிரம் பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆகவே ஆட்சி மாறினாலும் கொள்கை மாறவில்லை. எதிர்க் கட்சியினரும் தமது அரசியலை மட்டுமே கருத்தில்கொண்டு செயற்பட்டு வருகின்றனர். ஆகவே அரசியலுக்கு அப்பால் நாம் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும். 

பாராளுமன்றத்தில்  இன்று வெள்ளிக்கிழமை இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்தொழில் மற்றும் நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31