(நா.தினுஷா)
தேசிய ரீதியிலான புனித திரிபீடகவாரம் நாளையுடன் நிறைவுக்கு வரவுள்ளதுடன் பாளி மொழியிலான தேரவாத திரிபீடகத்தை யுனெஸ்கோ உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்குவதற்கான முன்மொழிவினை யுனெஸ்கோவிடம் கையளிப்பதற்கான நிகழ்வும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டி தலதா மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு நாளை பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் யுனெஸ்கோ நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநாயக்க தேரர்கள், ஆளுனர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமாகிய தேசிய திரிபீடக வாரம் நாளையுடன் நிறைவுக்கு வருவதை முன்னிடடு கண்டி தலதா மாளிகையில் விசேட சமய அனுஸ்டானங்களுடனான சமய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த நிகழ்வுக்கென 60 க்கு மேற்ப்பட்ட வெளிநாட்டு தூதுவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மலவத்து, அஸ்கிரிய, அமரபுர உள்ளிட்ட மாசங்கங்களை சேர்ந்த தேர்ரர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM