பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்துள்ளதோடு,அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த இச்சம்பவம் நேற்றைய தினம் பொகவந்தலாவ கொட்டியாகலை,தெரேசியா போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் பொகவந்தலா,பலாங்கொட இரத்தினபுரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கேசல்கமுவ ஒயாபகுதியிலே இந்த சட்டவிரோ மாணிக்கக்கல் அகழ்வினை மேற்கொண்டு வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட 10 சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு,சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM