கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் ஏற்பட்ட கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடிகளை கொண்ட தனியார் வணிக வளாக கட்டடம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் திடீரென்று இடிந்து விழுந்தது.
இதனால் கட்டட இடிபாடுகளுக்குள் 100 க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். சம்பவம் நடந்த முதல் நாளில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 60 க்கும் மேற்பட்டோர்களை தீயணைப்பு படையினர், பொலிஸார், பொதுமக்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர். முதல் நாளில் 2 உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் 2 ஆவது நாள் மீட்பு பணியின்போது 5 உடலங்களும். நேற்று 3 ஆவது நாள் மீட்பு பணியின்போது 6 சடலங்களுமாக மொத்தம் 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் இன்று 4 ஆவது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM