வாக்கெடுப்பின்றி நிறைவேறியது பிரேரணை   

Published By: Vishnu

21 Mar, 2019 | 08:23 PM
image

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரிட்டன் கனடா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளினால் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட புதிய 40-1 என்ற பிரேரணை  இன்று வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இன்று மாலை ஜெனிவா நேரப்படி  3 மணியளவில் இலங்கை  தொடர்பான பிரேரணையை  நிறைவேற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது. 

அப்போது   47 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும்     மனித உரிமை பேரவையில் பிசன்னமாகியிருந்தனர். 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் தலைவர் தலைமையில்  பிரேரணையை நிறைவேற்றும் பணிகள் நடைபெற்ற நிலையில்  இலங்கையின்  சார்பில்  அமைச்சர் திலக் மாரப்பன  தலைமையிலான  பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

இதன்போது பிரிட்டன்  பிரதிநிதி   உரையாற்றினார். அத்துடன்    அமைச்சர் திலக் மாரப்பனவும்    உரையாற்றினார்.   தொடர்ந்து  பிரேரணையை  வாக்கெடுப்புக்கு விடுவதா அல்லது    ஏகமனதாக நிறைவேற்றுவதா என மனித உரிமை பேரவையின் தலைவர் வினவினார். 

இதன்போது எந்தவொரு நாடும் எதிர்ப்பு தெரிவிக்காததன் காரணமாக    இலங்கை குறித்த பிரேரணை  வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36