சர்வதேசத்திடம் அடிபணிந்து சென்றமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும் - கெஹெலிய ரம்புக்வெல 

Published By: Vishnu

21 Mar, 2019 | 08:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் அடிபணிந்து சென்றமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க,  நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரது நோக்கங்கள் நிறைவேறவுள்ளன. 

இலங்கைக்கு எதிராக தற்போது சர்வதேச நாடுகள் த்களின் கடுமையான அதிருப்தியினை  வெளிப்படுத்தியுள்ளன. சர்வதேசத்தின் உறவுகளுக்கான நாட்டின் இறையாண்மையினை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. 

யுத்தம் முடிவடைந்த பின்னர் பொறுப்புக் கூறும் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் இனநல்லிணக்கம் முன்னிட்ட விடயங்களை அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் கொண்டு செல்ல தவறி விட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47