போலி நாணயத்தாள்களுடன் ஐவர் கைது

Published By: Daya

21 Mar, 2019 | 03:28 PM
image

கிரிபத்கொடையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட்ட ஐந்து சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

கிரிபத்கொடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 1000 ரூபா நாணயத்தாள்கள் ஐந்து உட்பட 500 ரூபா நாணயத்தாள்கள் மூன்று ஆகியவற்றுடன் சந்தேகநபர்கள் ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர்களை விசாரித்த போது போலி நாணயத்தாள்கள் அச்சிட்டு வெளியிடும் நபர்களிடமிருந்து பணத்தை பரிமாற்றுவதற்காக பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் களனி - திப்பிட்டிகொட பகுதியில் அமைந்துள்ள வீட்டை சுற்றிவளைத்தபோது 1000 ரூபா  போலி நாணயத்தாள்கள் 27 மற்றும் 500 போலி நாணயத்தாள்கள்  நான்கு  ஆகியவற்றுடன் பிரதான சந்தேக நபரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்காக பயன்படுத்திய இயந்திரம் மற்றும் கணினிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

குறித்த சந்தேகநபர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01