19 வயதிற்குட்பட்டோருக்கான மாகாணமட்ட கிரிக்கெட் தொடர் ஒன்றை இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மே மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தேசிய அணிக்கான வீரர்களை இந்த வயதிலிருந்தே தயார்படுத்துவதே இந்தத் தொடரின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது. அதேவேளை, இந்தத் தொடரின் மூலம் அதீத திறமைகளை வெளிப்படுத்தும் வீரர் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியுடன் இணைத்துக்கொள்ளப்படுவார்.
இணைத்துக் கொள்ளப்படும் வீரரை வெறுமனே மைதானத்திற்கு வெளியே ஆசனத்தில் அமரச் செய்துவிட்டு போட்டியை பார்த்துக்கொண்டிருக்க விடாமல், விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படுவார் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன.
ஆரம்பகட்டப் போட்டிகள் 2 நாட்கள் கொண்ட போட்டிகளாக நடைபெறவுள்ளன. அதன்பிறகானஇ இறுதிப் போட்டி ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் 3 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறவுள்ளது.
19 வயதிற்குட்பட்டோருக்கிடையே நடைபெறும் போட்டியென்பதால் இருபதுக்கு 20 போட்டியை இதில் நடத்த முடியாது என்றும்இ 2 நாட்கள் கொண்ட போட்டியை நடத்தும் பட்சத்தில் கிரிக்கெட்டை தொழில்நுட்ப ரீதியாக இளம் வீரர்கள் அணுகுவார்கள் என்றும் அதன் மூலம் நிறைய அவர்கள் கற்றுக்கொள்ள முடியும் என்பதையும் திலங்க சுமதிபால சுட்டிக்காட்டினார்.
இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அணிகளும் பங்குபற்றுகின்றமை விசேட அம்சமாகும். அதேபோல் சப்ரகமுவ மாகாணத்தில் அணியொன்றை உருவாக்குவதற்கு போதுமான வசதிகள் இல்லாமையினால் இரத்தினபுரி மாவட்ட வீரர்கள் ஊவா மாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தி விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை நடத்த 23 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM