நாவலபிட்டியிலிருந்து தலவாகலை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நாவலபிட்டி தலவாகலை பிரதான வீதியின் கடியஞ்சேன பகுதியில் வைத்து இன்று பகல் 2.30 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலபிட்டியிலிருந்து தலவாகலைக்கு பயணிகள் இருவரை ஏற்றிச் சென்ற போதே குறித்த முச்சக்கரவண்டி தீ பற்றி எரிந்துள்ளது.
முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே குறித்த தீ பரவலுக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவருக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்பட்டாத போதிலும் முச்சக்கரவண்டி முற்றாக தீக்கிரையானது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM