சிங்கள மன்னர்கள் காலம் முதல் பல நூற்றாண்டுகளாக இலங்கைக்கும் பிரானஸ்சுக்குமிடையே மிக நெருக்கமான தொடர்புகள் காணப்படுவதாகவும் எந்தவகையிலும் இலங்கைக்கு பாதமானக அமையும் விதத்தில் எந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவெர்த் தெரிவித்தார்.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர் வண. வரகாகொடை ஞானரத்ன தேரரை சந்திதத் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-
எது வித நிகழ்ச்சிநிரலுக்கும் அப்பால் அனுபவரீதியாகவே இலங்கை விடயங்களில் தமது நாடு கையாள்வதாகவும், இலங்கையின் அபிவிருத்தி தொடர்பாக பிராண்ஸ் பாரிய ஒத்துழைப்பை வழங்க முன் வருவதாகவும் மாத்தளை மாவட்டத்தில் குளங்களை புனரமைப்பதற்கு உதவியதன் மூலம் விவசாயத்துறை அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்புகளைச் செய்துள்ளதாகவும் கூறினார்.
கண்டியிலுள்ள தொல்பொருள் இடங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் தமது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அதன் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களுக்கு தெளிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமையாக கண்டி நகர் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதால் அதன் வனப்பும்ரூபவ் வரலாற்று பாரம்பரியங்களும் பாதுக்கக்கப்பட வேண்டும்.
பிராண்ஸ் நாட்டை அபிவிருத்தி செய்யும் போது நாட்டு மக்கள் பல்வேறு தியாகங்களைச் செய்தனர். அதன் பிரதி பலனாக இன்று பிராண்சில் வாகன நெரிசல் குறைந்து விட்டது. அனேகமான மக்கள் பொது போக்குவரத்து வசதிகளான ரயில் சேவை, பஸ்சேவை என்பவற்றையே பயன்படுத்தி வருகின்றனர். கண்டி நகரிலும் அதே விதமாக தியாகங்ளுக்கு மத்தியில் தொழிற்பட்டால் காலப்போக்கில் அபிவிருத்தி அடிப்படையில் நன்மையடைய முடியும். சில அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக நாம் அரசிற்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். முறையான தலைமைத்துவம் மூலம் அவற்றைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM