மாத்தளை - லக்கல பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் இன்று காலை லக்கல - வெலேலெவெல சந்தகல விகாரையில் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த விகாரையின் தலைமை தேரரால் தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து குறித்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லக்கல பொலிஸ்நிலையத்தில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள குறித்த விகாரையின் நீர்த்தாங்கிக்கு அருகில் குறித்த துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த ஆயுதங்களில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும், 5 கைத்துப்பாக்கிகளும் மீடகப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆயுதங்கள் கடந்த 14ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் துப்பாக்கிகள் திருடப்பட்ட சமயத்தில் கடமையிலிருந்த பொலிஸார் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM